பாண்டியரின் முன்னோர் பரதவர்
உலகப்புகழ் பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், வரலாற்றாசிரியருமான "ஹென்றி ஹெராஸ்" சிந்து சமவெளியில் கிடைத்த கல்வெட்டுகளை ஆராய்ந்து தமது நூலில் கூறியதாவது....
"சிந்து சமவெளியில் கிடைத்த கல்வெட்டுகளில் சந்திரகுல பரவர்கள் அங்கு நாடு, நகரங்கள் அமைத்து வாழ்ந்ததையும், அவர்களின் அரசர்கள் மீனவன் என்ற பட்டமும், இரட்டைமீன் சின்னத்தை தங்களது கொடியிலும் கொண்டிருந்ததை பற்றி கூறுகிறது" என்று பதிவு செய்கிறார்.
மேலும் "ஹென்றி ஹெராஸ்" கூறுகையில்....
இதேபோல தென்னகத்திலும் "மீனவன்" என்ற ஒரு அரசமரபு இருக்கிறார்கள், இவர்கள் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆவர். இவர்களுடைய இலச்சினையாகவும் இரட்டைமீன் சின்னமே உள்ளது.
பாண்டியர்கள் தென்னகத்தில் கட்டிய கோவில்கள், அவர்கள் வெளியிட்ட காசுகள், இதுபோக சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அதிவீரராம பாண்டியரின் புதுக்கோட்டை செப்பேடுகள் மற்றும் இலங்கையின் திருகோணமலை நகரில் "ஃப்ரடெரிக்" கோட்டையின் வாயில் மீதும் சரி, இரட்டைமீன் சின்னமே பாண்டியர்களின் இலச்சினையாக பொறிக்கப்பட்டுள்ளது.
மதுரையை ஆண்ட பாண்டியர்களே பரவர் நாடு என்று அழைக்கப்படும் முத்துகுளித்துறையில் வாழ்ந்த பரவர்களின் பரம்பரை தலைவர்கள் ஆவர். இதன் காரணமாகவே இவர்கள் மீனவர்கோன் என்று அழைக்கப்பட்டனர். எந்தவொரு பாரபட்சம் இல்லாமல் பரவர்களை பற்றிய சிந்து சமவெளி கல்வெட்டு செய்திகளை, மேற்சொன்ன பாண்டியர்களின் பட்டம், குலம், சின்னம் பற்றிய செய்திகளோடு ஒப்பு நோக்கினால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது.
அதாவது சிந்து சமவெளியில் வாழ்ந்த பரவர்கள் தங்கள் அரசர்களுடன் வளமான மற்றும் பாதுகாப்பான இடத்தை தேடி தென்னகதற்கு இடம் பெயர்ந்து உள்ளனர், குறிப்பாக சிந்து சமவெளியில் நடைபெற்ற ஆரியர்களின் படையெடுப்புக்கு பிறகு.
இப்படி தென்னகத்திற்கு இடம்பெயர்ந்த வந்த சந்திரகுல பரவர்களும், அவர்களின் இரட்டைமீன் சின்னமும், மீனவன் என்ற பட்டமும் பெற்றிருந்த அரசர்களுமே மதுரையை ஆண்ட பாண்டியர்களுக்கும் அவர்களின் மக்களான முத்துகுளித்துறை பரவர்களுக்கும் முன்னோராக இருத்தல் வேண்டும் என்று தமது ஆய்வை முடிக்கிறார் "ஹென்றி ஹெராஸ்".
தமிழர்களுள் ஆதியிலிருந்தே இரட்டைமீன் சின்னத்தை தங்களது அடையாளமாக கொண்டிருந்தவர்கள் பரவர்கள் மட்டுமே என்பதனை நாம் ஆணித்தரமாக கூறலாம்.
______________________________________________________________
ஆதாரம்:
The Meenavan in Mohenjo daro by Henry Heras Pg. 287-88
- UNI
மதுரை மாநகரில் தங்கியிருந்து வணிகம் செய்து வருகின்ற பரவர் வணிகர்களின் வழிபாட்டு தேவைகளுக்காக மதுரை ராஜ்யத்தின் மன்னர் வீரப்ப நாயக்கர்(1572-1595) அதேநகரில் தேவாலயம் மற்றும் மடாலயம் கட்டிக்கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கினார்.
கிபி 1592 ஆம் ஆண்டு பரவர் வணிகர்கள் மதுரையில் எழுப்பியிருந்த தேவாலயத்தில் பங்கு தந்தையாக பொறுப்பேற்க பாதிரியார் கோன்சாலோ பெர்ணான்டஸ் பரவர் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
----------------------------------------
Foot Notes:-
LA MISSION DU MADURE VOL II BY FATHER BERTRAND 1818. Pg 1,2
- UNI
மதுரையின் முதல் தேவாலயம்
Dev Anandh Fernando
07:50
பாண்டிய அரச வம்சம் இவ்வுலகில் நிலைநிற்க
தன் பிள்ளையை பலி கொடுத்த பரதவன்..!
(மறைக்கப்பட்ட வரலாறு)
பாண்டியர்க்கு ஆகாத நாளில் பிள்ளை பிறக்க, அப்பிள்ளை இருந்தால் ஆறு ஆண்டுகள் மழை பெய்யாது பிராணிகள் நாசமாகுமென்றும், அப்பிள்ளையைக் கடலிலே போடுகிறது தான் தன்மமென்றும் சோதிடர்கள் சொல்ல பாண்டியர், தேவேந்திர வல்லவராயன் என்னும் ஒரு பரதவனை அழைத்து...
"நீ என் பிள்ளையை கடலில் போட்டு வருவாய்!"
என்று கூற. அதற்குத் தேவேந்திர வல்லவராயன் என்னும் அப்பரதவன்...
"நாம் பாண்டியரின் பிள்ளையை கொலை செய்வது சரியல்ல" வென்று கருதி பாண்டியரின் பிள்ளையை தன் மனைவி கையில் கொடுத்துவிட்டு தன் பிள்ளையை கடலிலே போட்டான்.
சிலகாலம் சென்ற பிறகு பாண்டியர்க்கு ராஜயோகம் பிறந்த காலத்தில் தான் பாதுகாத்து வளர்த்த பாண்டியரின் ஓரே பிள்ளையை, அப்பாண்டியரிடமே கொண்டு சென்று காட்டி, பாண்டியரின் அப்பிள்ளைக்கு பட்டாபிஷேகம் செய்தான் தேவேந்திர வல்லவராயன் என்னும் அப்பரதவன்.
மேற்கூறிய இத்தகவலானது கி.பி. 1300 களில் எழுதப்பட்ட காங்கேயனின் வலைவீசி சுவடியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- UNI
பாண்டிய வம்சம் காத்த பரதவன்
Dev Anandh Fernando
23:50